Posted on: May 25, 2024 Posted by: Deepika Comments: 0

எழும்பூர் – சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் தெற்கு ரயில்வே அறிவிப்பு

Egmore – Salem Express Train

எழும்பூரில் இருந்து சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெறும் திருவிழாவையொட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Egmore - Salem Express Train

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெறும் திருவிழாவையொட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, சேலம் செல்லும் அதிவிரைவு ரெயில் (வண்டி.எண்-22153) ஜூன் 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை மேல்நாரியப்பனூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.  பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு, காஷ்மீரில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா ரயில் நிலையம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16031) நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 29-ந் தேதிகளில் தெலுங்கானா மாநிலம் மத்திராவில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment