Posted on: April 13, 2024 Posted by: Deepika Comments: 0

ஏப்ரல் 19: வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகள் – தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

April 19: Drinking Water

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 தேதி மக்களவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு 6.23 கோடி வாக்காளர்களில் 70 % பேருக்கு ‘பூத் சிலிப்’ வழங்கப்பட்டுள்ளதாகவும், 99 % வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, சாய்தளம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ள தாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

April 19: Drinking Water

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு, இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது: தமிழகத்தில் உள்ள மொத்தம் 6.23 கோடி வாக்காளர்களில், ஏப்.11-ம் தேதி மாலை வரை, 4.36கோடி அதாவது 70 சதவீதம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் (ஏப்.13) 100 சதவீதம் வழங்கி விடுவோம் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment