Posted on: May 2, 2024 Posted by: Deepika Comments: 0

பக்கவிளைவு ஏற்படுத்தும் கோவிஷீல்டு தடுப்பூசி – இங்கிலாந்து நிறுவனம் ஒப்புதல்

Covishield Vaccine

கொரோனா தடுப்பூசி (Covishield Vaccine) அரிதான சந்தர்ப்பங்களில், ரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தும் என்று இங்கிலாந்து நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

Covishield Vaccine

கொரோனா வைரஸ்

  • சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
  • கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்ததில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது.
  • அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
  • 51 வழக்குகள் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்டன.
  • இவ்வழக்குகள் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கோர்ட்டில் அளித்த ஆவணத்தில், கோவிட் தடுப்பூசி ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக தி டெலிகிராப் ஊடகம் தெரிவித்துள்ளது.
  • கொரோனா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில், ரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு (டி.டி.எஸ்.) வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தும்.
  • இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்கும் பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment